Monday 2 November 2015

கோழி ஈ

கோழி முட்டை மற்றும் இறைச்சியில் உயர் தரமான புரோட்டீன், தாதுப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் சாதாரண உணவு வகையில் இருப்பதற்கு சமமாக உள்ளது. கோழியின் உரம் அதிக அளவு மற்றும் தன்மை தரக்கூடியது. இதைப் பயன்படுத்துவதால் அனைத்து பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கலாம். ஆனால், இந்த கோழிப் பண்ணைகள் பெரும்பாலும் கிராமபுறங்களிலேயே அமைக்கப்படுகின்றன.  மாசில்லா கிராமப்புறங்களில் பெருமளவில் இப்பண்ணைகள் நோய் பரப்பும் தொழிற்கூடங்களாகவும், அருகிலுள்ள கிராம மக்களை மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன.  முட்டை, கோழி தேவை என்பதற்காக கோழிப்பண்ணைகளை கிராமப்புறங்களுக்கு அருகில் அமைத்து அக்கிராம மக்களை சுகாதாரமற்றவர்களாக ஆக்குவது நியாயமா?

கோழிப்பண்ணைகளில் இருந்து எண்ணிலடங்கா ஈக்கள் தினமும் உற்பத்தியாகின்றன.  அவைகள் அருகிலுள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்கின்றன.  எங்கு பார்த்தாலும் வீடுகளில் ஈக்கள் மொய்த்து அவரவர் வீடுகளில் இருப்பதற்கு அவர்களையே தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகின்றன.  புகாரளித்து கிராமபுறங்களுக்கு அருகில் இருக்கும் கோழிப்பண்ணைகளை இழுத்து மூட போராடுபவர்களுக்கு எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாக அத்தகைய கோழிப்பண்ணையாளர்கள் அரசு வங்கிகளில் பெரும் தொகையை கடன் பெற்றுள்ளோம், இப்பொழுது மூடிவிட்டால் அத்தகைய தொகையை நான் எப்படி திரும்ப கொடுப்பேன் என பதிலை தயார்படுத்திவைத்துள்ளார்கள்.  மாசில்லா கிராமபுறங்களையும் இப்படி மாசடைய செய்வது தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 


ஈ தமிழில் இருசிறகிகள்
இவற்றின் வாய் அமைப்பு பெரும்பாலும் உறிஞ்சும் அமைப்பு கொண்டதாகவும், ஒரு சிலவற்றில் துளைக்கவோ, கடிக்கவோ ஏற்ற அமைப்பு கொண்டதாகவும் உள்ளன.  இருசிறகிகள் என்பன மிகப்பெரிய உயிரின வரிசை ஆகும். இதில் ஏறத்தாழ 240,000 வகை இனங்கள் அடங்கும்.  இருசிறகிகள் (ஈ-கொசு வரிசை உயிரிகள்) உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகள் முதல் வடமுனையின் கீழ்ப்பகுதிகள் வரையிலும் உள்ள நிலப்பகுதிகளிலும், உயர் மலைப்பகுதிகளிலும், கடலிலும் கூடக் காணப்படுகின்றன. இவை பரும அளவில் பெரும்பாலும் அரை மில்லிமீட்டர் முதல் 40 மிமீ வரை காணப்படுகின்றன, ஆனால் சில 70 மிமீ வரையிலும் இருக்கும். 
 
இருசிறகிப் பூச்சிகள் தொன்மங்களிலும் இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தின் மிகப்பெரிய பத்து தொற்று நோய்களில் ஒன்றான நாலாம் தொற்றுநோய் இந்த இருசிறகிப் பூச்சிகளால் வந்ததாக பதியப்பட்டுள்ளது. 
 
ஒரு நபருக்கான முட்டை இருப்பு 41 முட்டைகளாக தற்போது உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக பரிந்துரைப்படி ஒரு வருடத்திற்கு ஒரு நபருக்கு 182 முட்டைகள் தேவைப்படுகிறது.  ஆதலால் கோழிப்பண்ணைகள் அவசியம் தான்.  அவைகளை மக்கள் வசிப்பிடமான கிராமங்களுக்கு அருகில் இருத்தல் கூடாது.
 
கூடாரத்தை ஈக்கள்/ கொசுக்கள் மொய்க்காமல், கூடாரத்தை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  ஆனால் ஈக்களை கட்டுப்படுத்துவதில் பெரும்பாலான கோழிப்பண்ணைகள் தோல்வியடைந்துள்ளன. 

ஒவ்வொரு பகுதி வளர்ந்த கோழிகளை அகற்றும் போதும், அதனுடைய மாசுபடிந்த கழிவுகள் மற்றும் உரத்தை அகற்ற வேண்டும். சுவர்கள் மற்றும் தரையை சுத்தப்படுத்த வேண்டும். சுவரை சுண்ணாம்பு கரைசலுடன் 0.5% மாலத்தியான் அல்லது டி.டி.டி திரவம் கலந்து வெள்ளையடிக்க வேண்டும்.  கூண்டு அமைப்பு வைப்பதாக இருந்தால், கோழியின் எச்சங்களை பரப்பி, அதனுடன் சுண்ணாம்புத் தூள் அல்லது 10% மாலத்தியான் தெளிப்பு மாதத்திற்கு 2 முறை தெளித்து ஈக்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம். கூண்டிற்கு அடியில் உள்ள எச்சங்களை 6 மாதங்களுக்குப் பிறகு அகற்றிவிட வேண்டும்.  அனைத்து கருவிகளையும் 0.5% மாலத்தியான் கொண்டு ஒவ்வொரு பகுதி பறவைகள் வெறியேற்றும் போதும், சுத்தமாக கழுவி, நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.  போன்ற விதிமுறைகளில் பெரும்பாலனவற்றை கோழிப்பண்ணைகள் பின்பற்றினாலும் அதனால் ஈக்கள் கிராமப்புறங்களில் தொல்லை கொடுப்பது நீங்குவதில்லை. 

மாசில்லா கிராமங்களை, கிராம மக்களை இவ்வாறு சுகாதர சீர்கேடு அடைய செய்வதை கட்டுப்படுத்துவது மிக அவசியமான ஒன்று.

No comments:

Post a Comment