Tuesday 27 October 2015

தொலைக்காட்சி தொடர்களே இது நியாயமா?

தொலைக்காட்சிகளில் விதவிதமான எத்தனையோ நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.  ஆனால், தொடர்களுக்கு இருக்கும் இடத்தை எந்த புதிய நிகழ்ச்சிகளாலும் ஆக்கிரமிக்க முடியவில்லை.  தொடர்கள் பெரும்பாலான வீடுகளில் பிரிக்க முடியாதவையாக மாறிவிட்டது.  அவைகளால் நன்மைகளை விட தொந்தரவுகள் நாள் தோறும் பெருகிகொண்டே இருக்கின்றன.  குறிப்பாக ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மறந்து மகிழவே தொலைக்காட்சியை நாடுகிறோம்.  ஆனால், தொலைக்காட்சிதொடர்கள் செயற்கையான கதையில் நம்மையும் சேர்த்து நாம் விரும்பியோ, விரும்பாமலோ பினைக்கப்பட்டு அவர்கள் பிரச்சனைகளை யோசிக்க ஆரம்பித்து நம் வேலைகளில் தொய்வு தான் ஏற்படுகிறது. 


இந்த தொலைக்காட்சி தொடர்கள் எத்தனையோ பயனுள்ள தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நம்மை புறக்கணிக்க வைக்கிறது. 
அதுமட்டுமல்லாது எவ்வாறு எல்லாம் சதி செய்து கொள்ளலாம் நம் எண்ணங்களை நிறைவேற்ற என நமக்கு தெரியாமலேயே நமக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறது.  கலை, கலாச்சாரம் எல்லாம் எங்கே போகும் இவ்வாறே நீடித்தால்? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் என விழாக்காலங்களில் மட்டும் போட்டுகொண்டால் போதுமா என்ன. 


இவர்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைத்தால் போதுமா, சமூகத்திற்கு நன்மை நடந்தால் என்ன, தீமை நடந்தால் என்ன என்று இருக்கும் ஊடகங்களை எப்பொழுது புறக்கணிக்குமோ இந்த உலகம். 

இதே தொலைக்காட்சிகள் நம் தமிழ் இலக்கியங்களை காட்சிபடுத்தினால், நாம் பார்க்காமல் இருப்போமா என்ன.   மகாபாரதம், இராமாயணம் ஊடகங்களில் காட்சிபடுத்தப்பட்டு வெற்றியடைந்தாலும் அவை இரண்டை தவிர வேறு நம் தமிழ் இலக்கியங்களை காட்சிபடுத்தி மக்கள் மனத்தில் நிறுத்தலாம்.  அப்படி செய்தால் எக்காலத்தும் அவர்களை தமிழ் சமுதாயம் போற்றும். 

நம் நூல்கள் அனைத்தும் பிற்காலத்திலாவது தொலைக்காட்சிகளில் காட்சிபடுத்தப்பட்டால் வருங்கால சந்ததியினருக்கு தமிழ் மீது உள்ள எண்ணம் மாறும் தமிழ் கற்க எல்லையில்லா ஆர்வம் பெருகி கற்பார்கள்.

நன்றி! 

No comments:

Post a Comment